தமிழ்நாடு (Tamil Nadu)

சுடுகாட்டில் பிணம் போல் படுத்து விவசாயிகள் போராட்டம்

Published On 2024-05-30 09:45 GMT   |   Update On 2024-05-30 09:45 GMT
  • போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
  • சுடுகாட்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி:

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

இன்று கர்நாடகா மற்றும் கேரளா அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி ஆற்றில் நதிநீர் பங்கீட்டின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் உள்ள தகன மேடையில் விவசாயிகள் பிணம் போல படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் கார்த்திகை தீப கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.

இது குறித்து கோவில் உதவி ஆணையர் அனிதா கொடுத்த புகாரின் பேரில் அய்யாக்கண்ணு உள்பட 8 விவசாயிகள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முக்கொம்பு அணைக்கட்டு பகுதியில் தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுடுகாட்டில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News