என் மலர்
திருச்சிராப்பள்ளி
- விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரிடம் தீவிர சோதனை செய்தனர்.
இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் யார்? போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு உள்ள தொடர்பு? இந்தியாவில் அவற்றை எங்கெங்கு சப்ளை செய்ய திட்டமிட்டிருந்தார் என பல கோணங்களில் கிடுக்குப்பிடி விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே கடந்த 1-ந்தேதி பாங்காக்கில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வட்ந்ஹ விமானத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அந்த பெண் பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
- போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருச்சி:
விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அந்த மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.
இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன்உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
- விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதன் முக்கிய நிகழ்வான வள்ளி கல்யாணம் நடந்தது.
முன்னதாக இன்று அதிகாலை திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது.
தத்ரூபமாக நடந்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் வியந்து தரிசனம் செய்தனர்.
- பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
- தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய ஒரு திட்டமாகும்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக முதலமைச்சரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.
வேளாண் துறைக்கு மட்டு மல்ல கூட்டுறவுத்துறை, ஆவின் துறை உள்ளிட்ட 9 துறை இருக்கிறது. எல்லா வற்றிற்கும் சேர்த்து தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட் என்றாலும் கூட பல நிதி வரவு செலவு அறிக்கை, நிதி பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்க நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.
மத்திய அரசு இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.
மத்திய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடும் இணக்கமான அரசாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்சனைகள் தொடா்வதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது.
- வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
திருச்சி:
புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்று உள்ளது. இன்று காலையில் திருச்சியிலும், மாலையில் கரூரிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2001-ல் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதி உள் ஒதுக்கீட்டில் அருந்ததினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு அறிவித்தார். இதன் மூலம் அருந்ததியினர் சமுதாயத்தினர் மட்டும் பலன் அடைந்தனர். மாறாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் பயனடைய முடியவில்லை.
இந்த பட்டியல் இனத்தில் 71 பிரிவுகளுக்கும் சரிசமமாக 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் வருகிற மே 17-ந் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் .இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைக் கட்சி ஆட்சியை அகற்றிவிட்டு ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சியை கொண்டுவர வேண்டும். ஒற்றைக் கட்சி ஆட்சி என்று சொல்பவர்கள் 2026-ல் புறக்கணிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன்பு அந்தந்த மாநிலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒப்புதல் வாங்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும். தற்பொழுது மத்திய அரசின் மும்மொழி புதிய கல்விகொள்கையை தி.மு.க. அரசு இந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இதற்கு மத்திய அரசு சரியான விளக்கத்தை சொல்லவில்லை. தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய குழந்தையை மும்மொழி அமல்படுத்தப்பட்ட பள்ளியில் படிக்க வைத்து விட்டு மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கொள்கைகல்வி கற்க கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதுதான் சமூக நீதியா பெரியார் அண்ணா வழியா ? திராவிட மாடலா?
ஒரு மொழி கொள்கையை பின்பற்றி ஜப்பான் போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மொழி வளர்ச்சிக்கு முக்கியமல்ல, மாறாக அறிவு தான் முக்கியம். ஆகவே மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் தி.மு.க. அரசு தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா ?
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ஒரு லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய தமிழக கட்சி சார்பில் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வழக்கு தொடர அனுமதி கேட்டோம். அப்பொழுது இந்த விஷயத்தை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் தற்பொழுது கனிம வள கொள்ளை மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் புதிய தமிழக கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
- சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
திருச்சி:
இன்றைக்கு இயற்கை மரணங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்து விட்டன. கோழைத்தனமும், தாழ்வு மனப்பான்மையும் ஒருவரை இந்த துயர முடிவுக்கு தள்ளி விடுகிறது.
முன்பெல்லாம் தற்கொலைக்கு காதல் தோல்வி, கடன் பிரச்சனைகள், தீராத வியாதி போன்ற வலுவான காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
இதில் வயது வரம்பு இல்லை. 10 வயது முதல் வயதான முதியவர் வரை வயது வித்தியாசம் இன்றி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக தற்கொலைகளின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பல பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்கிறார்கள்.
குடும்பத் தலைவரின் தற்கொலை முடிவு ஏதும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று விடுகிறது. இது வேதனையின் உச்சமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு அலுவலக அறையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவருக்கென்ன ராஜா மாதிரி என்பார்களே அந்த இடத்தில் தான் பெல் அதிகாரியும் இருந்தார். மத்திய அரசு பணி, மனைவி தனியார் பள்ளி ஆசிரியை, புகழ்பெற்ற என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஒரே மகள். அவருக்கு என்ன பிரச்சனையோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் குடும்ப அளவில் பெரிய கடன் பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 நாட்களில் சென்னை திருமங்கலத்தில் டாக்டர், தனது வழக்கறிஞர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானது. இவர் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதேபோன்று சில வாரங்களுக்கு முன்பு சேலம் தொழிலதிபர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுக்கோட்டை அருகே காரில் குடும்பத்தோடு வந்து, தன்னை மாய்த்துக் கொண்டதுடன் தனது வயதான தாய், மனைவி, மகன், மகள் அனைவரையும் விஷம் அருந்த செய்து அனைவரும் காருக்குள்ளேயே பிணமாக மீட்கப்பட்டனர்.கரூரில் கடந்த மாதம் ஒரு தொழிலாளி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாத கணவர் தனது 19 வயது மகள், 14 வயது மகன் ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு நாளும் பொழுதும் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் அழைக்கும் வரை வாழ்ந்து விட வேண்டும்.
இதுபோன்ற துயர முடிவுகளுக்கு நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாக, தற்கொலைதான் என இவர்களால் நம்பப்படுகிறது என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தமும் மற்றொருவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தியும் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது.
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம், வேலையின்மை, கடன், தொழிலில் நஷ்டம், தோல்வி பயம், காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், போதைக்கு அடிமையாதல், கல்விச் செலவு, நோய், மருத்துவச் செலவு, வரதட்சிணைப் பிரச்சினை, விபத்து, விவாகரத்து, உறவுகளைப் பிரிந்துவிட்டோம் என்ற ஏக்கம், பாலியல் வன்கொடுமை, முறையற்ற கர்ப்பம், குழந்தையின்மை, சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு, மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்ற எண்ணம், தேர்வில் தோல்வி, உடல்ரீதியான குறைபாடு, எதிர்பாராத செலவுகள், கந்துவட்டிக் கடனை நோக்கிக் கை நீட்டியதன் விளைவு என எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.
சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்வதில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
சமூகச் சூழலின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே எந்தப் பாவமும் அறியாத தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து, தற்கொலை என்ற பெயரில் கொலை செய்துவிடு கிறார்கள். இவற்றுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பாரம்பரியமான நம்முடைய கூட்டுக் குடும்ப முறை முற்றிலுமாக அழிந்துபோனதுமாகும். பெரியவர்கள், சிறியவர்கள் என சகல வயதினரும் உறவுகளும் கலந்து வாழும்போது எந்தவொரு பிரச்சினை என்றாலும் விவாதமும் பரஸ்பர ஆற்றுப்படுத்தலும் எளிதாக இருந்தது. பெற்றோர்கள் நமக்குப் பாரம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் நம்முடைய பொக்கிஷம் என்ற எண்ணம் இன்றைய இளைய தம்பதியினரிடையே உருவாக வேண்டும். இளமை என்ற இறுமாப்பைத் தளர்த்தி முதுமை பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்.
உண்மையான வாழ்க்கையின் உன்னதம் எது என்பதை அறியாமல் போனதும் எது வாழ்க்கை என்பதை ஒவ்வொரு வரும் தெளிவாகப் புரிந்து அறிந்துகொள்ளாததுமே தற்கொலை - கொலைகள் பெருகக் காரணங்களாக அமைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆக வாழ்க்கை வாழ்வதற்கே.... சாவதற்கல்ல...
- திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
- உணவு எடுத்து வருவதற்காக இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் மேல தெருவை சேர்ந்தவர் மூவேந்தன் (வயது 30) பெயிண்டர். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் சுஜாதா கர்ப்பம் தரித்தார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்துக்காக மூவேந்தன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அவருக்கு உணவு எடுத்து வருவதற்காக இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
சமயபுரம் மருதூர் சாலையில் ராஜ கள்ளிக்குடி என்ற பகுதி சாலை வளைவில் திரும்பியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூல மாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே மூவேந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மருத்துவ மனையில் பிரசவத்துக்காக மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே மருத்துவமனையில் பிரேத கிடங்கில் அவரது கணவரின் உயிரிழந்த உடல் வைக்கப்பட்டு இருப்பதும், கணவர் உயிரிழந்த செய்தியை மனைவியுடன் சொல்ல முடியாமல் அவர்களின் உறவினர்கள் தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ள நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த உம்மா ஹமீது நாச்சியார் (வயது 62) என்ற பெண் பயணி தனது உடமையில் மறைத்து ரூ.18.26 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
திருச்சி:
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மற்றும் கட்சியின் சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் மேடையேறியுள்ளார் நடிகர் விஜய். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார்.
யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்.
தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைத் தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
- சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது.
லால்குடி:
திருச்சியை அடுத்த லால்குடி கீழ வீதி ஸ்ரீ மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 61-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தகுதியான காளைகள் மட்டுமே மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 400 வீரர்கள் காளைகளை அடக்க களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், லால்குடி வட்டாட்சியர் முருகன் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
முதலில் கோவில் காளையும், தொடர்ந்து உள்ளூர் காளைகளும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிடுவதற்கு முன்பாக பரிசு பொருட்கள் பற்றியும் ஒலிப்பெருக்கியில் அறிவித்து கொண்டே இருந்தனர். காளையா...வீரனா.. என வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி மாடுபிடி வீரர்கள் சூழ்ந்து மல்லுக்கட்டி கொண்டு அதன் திமிலை பிடித்தும், கழுத்தை இறுகப்பிடித்தும் அடக்க முயன்றனர்.
சில காளைகள், மாடுபிடி வீரர்களை சிதறி ஓட செய்தது. மாடுபிடி வீரர்களை கொம்புகளால் முட்டி தூக்கி பந்தாடியது. சில காளைகள் தரையோடு தரையாக போட்டு போட்டு புரட்டி எடுத்தது. இதேபோல் திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிரூபித்தனர்.
காளைகளும் மாடுபிடி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டிய காட்சியை கண்ட பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் உற்சாகப்படுத்தினர். வீரர்கள் காயம் அடைந்தால் முதல் உதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
லால்குடி டி.எஸ்.பி தினேஷ் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழக அரசால் வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
- விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகளாக மஸ்கட் , ஓமன், துபாய், அபுதாபி, பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஸ்கூட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விமான சேவைகளை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் கடந்த சில நாட்களில் அதிக அளவிலான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவதால் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்வது தாமதமாகி பெரும் சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் மறுநாள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் அடுத்த நாள் செல்ல இருந்த குவைத் விமானத்தில் பயணிகள் அனுப்ப முடியாத காரணத்தினால் அவர்களும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 153 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது.
அந்த விமானம் புறப்பட்டு ரன்வே அருகில் சென்ற போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி கொண்டுவரப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறினை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த விமானம் கோளாறு சரி செய்யப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இதேபோன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு 10.30 மணிக்கு 144 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கூடாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அந்த கோளாறு சரி செய்யப்பட்டு இந்த விமானம் நள்ளிரவு 1.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானங்களில் அதிக அளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் காரணத்தினால் பயணிகள் பெறும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர விமான நிறுவனத்தினரும் விமான நிலைய அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த விமானங்களின் தொடர்ச்சியாக வேறு நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் போது அவர்களின் பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதற்கு விமானத்துறை உயர் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் பயணிகள்.
உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்படுவது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அதனால் பயணிகளூக்கு ஏற்படும் சவுகரியம் சொல்லிமாளாது என்ற நிலை உள்ளது.
மேலும் விமானம் புறப்பட்டபின் இதுபோன்ற நிலை உண்டானால் அதனால் ஏற்படும் சிக்கல்களும் அதிகம். வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.
- தினமும் 2 சேவைகளை திருச்சி விமான நிலையத்திற்கு வழங்கி வருகிறது.
- வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையை நம்பி உள்ளனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மட்டும் வழங்கி வருகிறது. இந்த விமானம் தினமும் 2 சேவைகளை திருச்சி விமான நிலையத்திற்கு வழங்கி வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையை நம்பி உள்ளனர். திருச்சியில் இருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், பின்னர் அங்கிருந்து இலங்கை வழியாகவே திருச்சி விமான நிலையத்திற்கு வருவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் நேரடி விமான சேவை இல்லாத காரணத்தினால் இந்த விமான சேவையை பயன்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.
மேலும் இந்த விமான சேவை தினமும் 2 முறை மட்டுமே திருச்சிக்கு இயக்கப்படுவதால் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து வருபவர்கள் தவிர திருச்சிக்கு இலங்கையில் இருந்து வருபவர்களும் இந்த விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் புதிய விமான சேவையாக இலங்கை யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அடுத்த மாதம் (மார்ச்) மாதம் முதல் புதிய சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக விமான தொடர்பினை பெற்று குறைந்த கட்டணத்தில் வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மேலும் இலங்கைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய நேரப்படி மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் மதியம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்தை சென்றடையும்.
மீண்டும் இந்த விமானம் மதியம் 2.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவை அதிக அளவிலான மக்கள் பயன்படும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.