தமிழ்நாடு (Tamil Nadu)

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் என அறிவிப்பு

Published On 2024-05-29 01:44 GMT   |   Update On 2024-05-29 01:44 GMT
  • தமிழகத்தில் வரும் 6-ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
  • மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு, பாடப்புத்தகங்களை வழங்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமே மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பாஸ் தரும் வரை டிக்கெட் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பஸ்களில் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்க மாட்டோம். பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெற்று, ஆன்லைன் மூலம் புதிய பாஸ் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News