தமிழ்நாடு

பாடகர் மனோ மகன்கள் விவகாரம்- பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது

Published On 2024-09-16 14:50 GMT   |   Update On 2024-09-16 14:50 GMT
  • மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.
  • இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.

மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.

பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

அதில், மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பலும் மனோவின் மகன்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கடந்த 11ம் தேதி சிறுவனை, மதுபோதையில் தாக்கியதாக மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News