தமிழ்நாடு செய்திகள்

சிறப்பு குழு வைத்து துணை வேந்தர்கள் மிரட்டல் - ஆளுநர் புகார்

Published On 2025-04-25 12:56 IST   |   Update On 2025-04-25 12:56:00 IST
  • ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
  • பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.

தமிழ்நாடு அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

இந்த நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் புகார் தெரிவித்தார்.

துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பல பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த மாநாட்டை நடத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News