தமிழ்நாடு செய்திகள்

3 மாவட்ட மக்களே உஷார்... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Published On 2025-04-16 13:13 IST   |   Update On 2025-04-16 13:13:00 IST
  • மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.
  • நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

* மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும்.

* நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.

* தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

Tags:    

Similar News