தமிழ்நாடு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் சார்பு நீதிமன்றம் - அமைச்சர் ரகுபதி தகவல்
- ஸ்ரீமுஷ்ணத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- திருச்சியில் கூடுதலாக குடும்ப நீதிமன்றம் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் ரகுபதி, ஸ்ரீபெரும்புதூரில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
ஸ்ரீமுஷ்ணத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம், திருச்சியில் கூடுதலாக குடும்ப நீதிமன்றம் அமைக்கப்படும். சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
மேலும் காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.