உலகம்

தீ பிடித்த வணிக வளாகம் 

இஸ்லாமாபாத்தில் தீப்பிடித்து எரிந்த வணிக வளாகத்திற்கு சீல் வைப்பு

Published On 2022-10-10 02:27 IST   |   Update On 2022-10-10 02:27:00 IST
  • இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
  • தீப்பிடித்தவுடன் எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தி மக்கள் தப்பித்தனர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற சென்டாரஸ் அடுக்குமாடி வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் பிடித்த தீ மற்ற பகுதிக்குள் பரவுவதை தடுக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடினர். தீ பிடித்தவுடன் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தி மக்கள் தப்பிக்கும் வீடியோ காட்சி சமூக வளைதளங்களில் வெளியானது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த தீ விபத்தை அடுத்து அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நகராட்சி ஆணையம் ஒரு குழுவை அமைத்து தீபிடித்த கட்டிடத்தின் திறன் குறித்து விசாரணை நடத்த கோரப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News