உலகம்

இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல்- ஜெலன்ஸ்கி கண்டனம்

Published On 2023-10-07 23:15 GMT   |   Update On 2023-10-07 23:16 GMT
  • இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 5 பேரை கடத்தியுள்ளோம் என பயங்கரவாத குழுவினர் கூறியுள்ளனர்.
  • பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும்.

கீவ்:

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 250 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் எக்ஸ் சமூக பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பயங்கரவாத தாக்குதலில் உறவினர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

பயங்கரவாதத்திற்கு இடமளிப்பவர்கள் மற்றும் அதற்கு நிதியளிப்பவர்கள், உலகத்திற்கு எதிரான ஒரு குற்றத்தில் ஈடுபடுபவர்கள் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி கூறியுள்ளார்.

உலகில் பயங்கரவாதத்திற்கு இடம் தர கூடாது என்றும் இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமை மறுக்க முடியாதது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் 5 பேரை கடத்தியுள்ளோம் என பயங்கரவாத குழுவினர் கூறியுள்ளனர். எனினும், இதற்கு இஸ்ரேல் பதிலளிக்கவில்லை. இஸ்ரேல் போரில் ஈடுபட்டு உள்ளது என்றும் இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியுள்ளார்.

Tags:    

Similar News