உலகம்

இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்... பிரதமர் மோடி

Published On 2024-07-09 06:42 GMT   |   Update On 2024-07-09 07:33 GMT
  • டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது இந்தியா.
  • கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கி.மீ. ரெயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அரசு முறை பயணமாக ரஷியா வந்துள்ள பிரதமர் மோடி இன்று மாஸ்கோவில் ரஷிய வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

* ரஷிய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி.

* 140 கோடி மக்களின் அன்பை கொண்டு வந்துள்ளேன்.

* 3 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளேன்.

* இந்தியாவை 3வது பொருளாதார நாடாக மாற்றுவதே எனது இலக்கு.

* இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்பட உள்ளது.

* சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா திகழும்.

* இந்தியா மாற்றத்தை நோக்கி செல்வதாக அனைவரும் கூறுகிறார்கள்.

* கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது.

* இந்தியாவில் லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டுள்ளன.

* டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது இந்தியா.

* கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கி.மீ. ரெயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News