search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ. 3,650 கோடி லாபம் ஈட்டிய மாருதி சுஸுகி
    X

    ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ. 3,650 கோடி லாபம் ஈட்டிய மாருதி சுஸுகி

    • ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    • உள்நாட்டு சந்தையில் மட்டும் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் ஜூன் மாதம் வரையிலான 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டைவிட நிகர லாபம் 47 சதவீதம் உயர்ந்து 3650 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.

    செலவு குறைப்பு முயற்சிகள், பொருட்களின் சாதகமான விலைகள் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றின் முக்கியமான காரணங்கள் இந்த லாபத்தை ஈட்ட முக்கிய காரணம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2024 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2,485 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 30,845 கோடி ரூபாய் நிகர விற்பனையாக இருந்த நிலையில் தற்போது 33,875 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    தற்போது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 5 சதவீதம் உயர்வாகும்.

    உள்நாட்டு சந்தையில் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விற்பனையில் இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 4 சதவீதம் உயர்வாகும்.

    2031 வரைக்கும் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வரவிருக்கின்றன. வருடத்திற்கு ஒரு புது மாடல் என்ற வகையில் வரவிருக்கிறது. ஏற்றுமதி விற்பனை 12 சதவீதம் (70,560) அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் ஜிம்னி (Jimny) சொகுசு கார் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×