search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் - இயக்குநர் ஷங்கர் கொடுத்த புது அப்டேட்
    X

    அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் - இயக்குநர் ஷங்கர் கொடுத்த புது அப்டேட்

    • இந்தியன் பாகம் 1 இயக்கி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
    • அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார்.

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்று கூறினாலே நமக்கு நியாபகத்திற்கு வரும் முதல் இயக்குனர் ஷங்கர் ஆவார். அவரின் கதையை நேர்த்தியாகவும் , மிக பிரம்மாண்டமாகவும் எடுக்கும் திறம் பெற்றவர். இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இந்தியன் பாகம் 1 எடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. உலகமெங்கும் பல நகரங்களில் படக்குழுவினர் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்படும் போது அங்கு நடந்த நேர் காணலில் அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார். அதில் அவர் கூறியது " தற்பொழுது எனக்கு 3 ஐடியாக்கள் உள்ளன, ஒன்று ஒரு வரலாற்று சிரப்புமிக்க திரைப்படம், மற்றொன்று ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம், மற்றொன்று சை ஃபை கதைக்களத்துடன் 2012 என்ற பெயரில் உருவாகவுள்ளது" என கூறினார்.

    இந்த மூன்று திரைப்படங்களும் மிகப் பெரிய பொருட் செலவிலும் அதில் நிறைய VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்படங்களில் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்பதையும் கூறீனார்.

    மேலும் அவர் ராம் சரண் நடிப்பில் இயக்கிக் கொண்டு இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு இன்னும் 15 - 20 நாட்கள் தான் படப்பிடிப்பு பணிகள் இருக்கிறது என கூறியுள்ளார். இந்தியன் 3 பாகத்தில் பெரும்பாலான காட்சிகளை படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதால் இன்னும் 6 மாதங்களில் அப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×