search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உன்னை நினைத்து 2ம் பாகம் எடுக்க போறேன்.. அதில் ஹீரோ இவர் தான்..! இயக்குனர் விக்ரமன்
    X

    உன்னை நினைத்து 2ம் பாகம் எடுக்க போறேன்.. அதில் ஹீரோ இவர் தான்..! இயக்குனர் விக்ரமன்

    • பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
    • சூர்யாவை வைத்து இவர் இயக்கிய உன்னை நினைத்து இயக்கினார்.

    குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். 'புதிய பாதை' படத்தில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணியாற்றியதை தொடர்ந்து, 1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

    இந்த படத்தை தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார்.

    இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய உன்னை நினைத்து இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014ம் ஆண்டில் நினைத்தது யாரோ என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு, அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்கள் இயக்கவில்லை.

    இந்நிலையில், இயக்குனர் விக்ரமன் உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×