search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நரிக்குறவர்களுக்கு மீண்டும் தியேட்டரில் அனுமதி மறுப்பு - `கருடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
    X

    நரிக்குறவர்களுக்கு மீண்டும் தியேட்டரில் அனுமதி மறுப்பு - `கருடன்' பார்த்துக்கொண்டிருக்கிறார்!

    • கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    • கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி, சசிக்குமார் இணைந்து நடித்துள்ள `கருடன்' திரைப்படம் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் பார்க்க வந்த 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தட மறுத்ததாகவும், திரையரங்கத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

    திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததால் இதுகுறித்து காவலர்களின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×