search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெளியே வா பாத்துக்கலாம் ... திமிராக பேசிய யோகி பாபு... வைரலாகும் வீடியோ
    X

    வெளியே வா பாத்துக்கலாம் ... திமிராக பேசிய யோகி பாபு... வைரலாகும் வீடியோ

    • . போட் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி சிம்புதேவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் `போட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க ஒரு படகு ஓட்டும் நபருடன் கடலுக்கு தப்பிக்கின்றனர்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்டார். அவர் நேர தாமதம் ஆனதுக்கு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மற்றொரு படப்பிடிப்பில் இருந்து வருவதால் தாமதம் ஆனது என்றார்.

    படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, இயக்குனர் சிம்புதேவனுக்கு நன்றி, படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆனாலும் செய்தியாளர் விடாமல் கேட்ட கேள்வியால் சற்று கடுப்பான யோகிபாபு அனைவருக்கும் நன்றி மேடையில் இருந்து கீழே இறங்கினார் அப்பொழுதும் விடாமல் ஒரு செய்தியாளர் கேள்விகளை கேட்டார். அப்பொழுது அதற்கு அவரைப் பார்த்து யோகி பாபு , மைக் ஆஃப் பண்ணிட்டு வெளியே வா சொல்றேன் என சொடக்குப் போட்டு சொல்லிவிட்டு கிழம்பி சென்றார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×