search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்- மோகன்லால்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்- மோகன்லால்

    • பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
    • மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.

    திருவனந்தபுரத்தில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் லோகோவை வெளியிட்ட நடிகர் மோகன்லால், கேரள திரையுலகை உலுக்கிய பாலியல் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, இங்கே தான் இருக்கிறேன்.

    * மலையாள திரையுலகினரின் அம்மா சங்கத்தில் நான் 2 முறை பொறுப்பில் இருந்துள்ளேன்.

    * பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.

    * பாலியல் புகார்களால் பெருமை மிகுந்த கேரள சினிமா சிதைந்து போயுள்ளது.

    * மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.

    * குழு கலைக்கப்பட்டாலும் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை, பணிகள் தொடர்கிறது.

    * ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் தான்.

    * பாலியல் குற்றச்சாட்டுகளால் கேரள நடிகர் சங்கம் சிதறி விடக்கூடாது.

    * மலையாள நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டது. அதன் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.

    * பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

    * சங்கத்தில் இருந்து விலகினாலும் இந்த பிரச்சனைகளை கூர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தேன்.

    * கேரள சினிமாவை தகர்த்து விட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×