search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ramkumar ganaesan
    X

    முன்னால் வர முண்டியடித்த நபரை சரமாரியாக தாக்கிய சிவாஜியின் மகன் ராம்குமார்

    • சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிவாஜியின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து அமைச்சர்கள் மு.பெரிய சாமிநாதன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, மயிலை த.வேலு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அப்படத்தின் பேனரை ஒருவர் பிடித்திருந்தார். அப்போது முன்னால் வர முண்டியடித்த ஒருவரை சிவாஜியின் மகன் ராம்குமார் சரமாரியாக தாக்கி உள்ளே தள்ளினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை சிவாஜியின் மகன் ராம் குமார் கோபத்துடன் தள்ளிவிட்டு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×