search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூது கவ்வும் 2 படத்தின் என்ன நடக்கும் பாடல் வெளியீடு!
    X

    'சூது கவ்வும் 2' படத்தின் 'என்ன நடக்கும்' பாடல் வெளியீடு!

    • சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் உருவாகிறது.
    • இப்படத்திற்கு 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

    ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். அண்மையில் சூது கவ்வும் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    ஏற்கனவே இப்படத்தின் 'மண்டைக்கு சூறு ஏறுதே' என்ற பாடலும் 'பேட் பாய்ஸ் மிஷன்' என்ற பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றிந்த நிலையில், தற்போது 'என்ன நடக்கும்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×