என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சென்னை அண்ணா சாலைக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான்.. என்னவா இருக்கும்..?
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
- இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்தது.
இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
சென்னை தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ.ஆர்.ரகுமான்
அதாவது, இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான 'சந்தனக்கூடு' என்ற 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்விற்கான அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்