என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
விமர்சனம் செய்பவர்களை குற்றவாளியாக்குவது பாசிசத்தின் அடையாளம் -இயக்குனர் வெற்றிமாறன்
- இயக்குனர் வெற்றிமாறன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.
- இவர் பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார். இவர் பல்வேறு கலை மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.
வெற்றிமாறன்
இந்நிலையில், பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, "ஒரு விமர்சனம் வரும்பொழுது அதை ஏற்றுக்கொள்வது என்பது ஜனநாயக போக்கு. ஜனநாயக அமைப்பு. அதை எதிர்ப்பது அல்லது நமக்கு எதிரான விமர்சனமே வரக்கூடாது என்பதும் எந்த ரூபத்தில் விமர்சனம் வந்தாலும் அதனை ஒடுக்குவதும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறவர்களை குற்றவாளிகளாக்குவது, அந்த விமர்சனத்தை முன் வைப்பவர்களை தேச விரோதிகளாக்குவது என்பது பாசிசத்தின் அடையாளங்கள். இந்த ஆவணப்படத்தை பார்ப்பது என்பது பாசிசத்திற்கு எதிரான செயலாகத்தான் பார்க்கிறேன். இதனை பகிர்வதும் பாசிசத்திற்கு எதிரான செயல்பாடாக தான் பார்க்கிறேன். இந்த ஆவணப்படத்தை தமிழில் கொடுத்ததற்கு விசிகவிற்கு வாழ்த்துக்கள்" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்