என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இரண்டு வாரங்களில் ரூ.450 கோடி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்?
- மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
- இந்த படம் வெளியான இரண்டு வாரங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
பொன்னியின் செல்வன்
இத்திரைப்படம் வெளியான பிறகு மன்னர் ராஜ ராஜ சோழனை பற்றியும், சோழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இணையதளத்தில் சோழர்கள் போர் பற்றி தெரிந்து கொள்ளும் தேடுதலும் நடக்கிறது. சமீபத்தில் தெலுங்கு மொழியில் பொன்னியின் செல்வனைப் பார்த்த ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் சிலர் சோழர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்க்க தங்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றுப்பயணமாக தமிழ் நாட்டிற்கு வந்தனர்.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.450 கோடியை வசூல் செய்திருப்பதாக திரைப்பட வர்த்தக தொடர்பாளர்கள் கணித்திருக்கிறார்கள். ஜெர்மனியில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்