search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்து கேட்ட மணிரத்னம்.. கூடவே வெளியான அறிவிப்பு
    X

    மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான்

    ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்து கேட்ட மணிரத்னம்.. கூடவே வெளியான அறிவிப்பு

    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் தொடர் அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது.


    இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், தொடர் அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் மணிரத்னம்

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் 'பொன்னியின் செல்வன் -2' படத்திற்காக கம்போஸ் செய்யும் இசையை இயக்குனர் மணிரத்னம் ரசித்து கேட்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த வீடியோவில் இப்படத்தின் அடுத்த பாடலான 'வீர ராஜ வீர' பாடலின் லிரிக் வீடியோ விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×