search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தாயே தாயே மகளென வந்தாய் - மகாராஜா படத்தின்  பாடல் வெளியானது
    X

    'தாயே தாயே மகளென வந்தாய்' - மகாராஜா படத்தின் பாடல் வெளியானது

    • விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
    • படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்பொழுது படத்தின் முதல் பாடலான 'தாயே தாயே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

    விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது.

    சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி ஒரு சலூன் கடையை வைத்துள்ளார். வீட்டில் உள்ள லட்சுமி காணாமல் போனது என்று போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார். அந்த லட்சுமி யார் என போலிஸ் விசாரிக்கிறது. யார் அந்த லட்சுமி என்பதை மர்மமாகவே வைத்திருக்கின்றனர். டிரைலர் மிகவும் சஸ்பன்சோடு அமைந்திருக்கிறது.

    படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்பொழுது படத்தின் முதல் பாடலான 'தாயே தாயே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பின்னணி பாடகரான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுதுசமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×