search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஈசன் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த இடம்
    X

    ஈசன் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த இடம்

    • சிவபெருமான் திருக்கழுக்குன்றம் மலையில் வீற்றிருந்த போதுதான் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்
    • எனவே இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக திகழ்கிறது.

    ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகர சரசுவதி சங்கராச்சாரிய சுவாமிகள் தம் 37-வது ஆண்டு ஆரம்பத்தில் 25-12-1930 பிரமோதூத வருடம் மார்கழி மாதம் 10-ம் நாள் வியாழக்கிழமை மாலை யானை, குதிரை பரிவாரங்களுடன், அடிவாரத்தில் வந்து தங்கி 10 நாட்கள் இருந்தார் 2-1-1931 வெள்ளிக்கிழமை பட்டணப் பிரவேசம் செய்தார். (நகர்வலம் வந்தார்) 4-1-1931 மாலை புறப்பட்டுச் சென்றார்.

    இரண்டாவது முறையாக இரண்டாண்டு கழித்து ஆங்கிரஸ வருடம் மாசி மாதம் வந்து மேலவீதியில் நான்கு நாட்கள் தங்கினார்.

    மூன்றாம் முறையாக சுமார் 12 ஆண்டு கழித்து வந்து சங்குதீர்த்த வடக்கு கரையில் பசுமடத்தில் தங்கி காலை, மாலை இருவேளையும் சங்குதீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபட்டார்.

    இத்தலத்தில் திருவாவடுதுறை ஆதீனமடம், குன்றக்குடி ஆதீனமடம் முதலியன உள்ளன.

    சிவபெருமான் திருக்கழுக்குன்றம் மலையில் வீற்றிருந்த போதுதான் பார்வதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார் என்று புராண வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    எனவே இத்தலம் திருமண வரம் அருளும் தலமாக திகழ்கிறது.

    Next Story
    ×