search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இரண்டு நாய் வாகனத்துடன் அருள்பாலிக்கும் பைரவர்
    X

    இரண்டு நாய் வாகனத்துடன் அருள்பாலிக்கும் பைரவர்

    • மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது.
    • திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர்.

    திருநாகை:

    நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

    மதுரை:

    இங்கு இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும், கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர்.

    மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது.

    இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

    திருவண்ணாமலை:

    இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

    திருமயம்:

    இக்கோவில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது.

    இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது.

    கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.

    இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார்.

    திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×