search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருக்கழுக்குன்றம் ஆலயத்தின் சிறப்பான அமைப்பு
    X

    திருக்கழுக்குன்றம் ஆலயத்தின் சிறப்பான அமைப்பு

    • கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.
    • கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இறைவன் - பக்தவத்சலேஸ்வரர்.

    இறைவி - திரிபுரசுந்தரி.

    தலமரம் - வாழை.

    தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

    மிகப் பழமையான கோவில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன.

    கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.

    கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்தம்' உள்ளது.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது.

    இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க, இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    Next Story
    ×