என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
வியதீபாத சிரார்த்தம்: இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாள்
- இன்று சிரார்த்தம் செய்வதால் திருமண தடை அகலும்.
- இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.
மறைந்த முன்னோர்களுக்காக இன்று பித்ரு சிரார்த்தம் செய்ய வேண்டிய தினமாகும். இன்றைய சிரார்த்தத்துக்கு வியதீபாத சிரார்த்தம் என்று பெயர். நட்சத்திரங்கள் 27 இருப்பது போல இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். இந்த யோகங்களில் வ்யதீபாத யோகமும் ஒன்று.
சந்திரன் குருபத்தினியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமான சூரிய பகவான் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனை கோபத்துடன் நோக்கினான்.
அப்போது அவர்களுடைய கோபப் பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதையாகும். இன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.
ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் 13 வியதீபாதங்களும் அடங்கும. இன்று செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் இந்த வ்யதீபாத யோக தினத்தில் செய்யும் பித்ரு வழிபாட்டால் இந்த யோகத்தின் தோஷம் குறையும்.
இன்று சிரார்த்தம் செய்வதால் திருமண தடை அகலும். வேலை கிடைக்கும். கடன் அடையும். குழந்தைகள் பேசாத பேச்சு குறைபாடுகள் நீங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்