என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
வெற்றி தரும் விஷ்வக்சேனர் விரத வழிபாடு
- இன்று காலை 10.25 மணி முதல் நாளை காலை 8.47 மணி வரை பூராட நட்சத்திரம்.
- இன்று விரதம் இருந்து விஷ்வக்சேனரை வழிபட மறக்காதீர்கள்.
பகவான் விஷ்ணுவின் நெருங்கிய தொண்டர்களாக அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் ஆகிய 3 பேரை சொல்வார்கள். பெருமாள் படுத்து தூங்கும் ஆதிசேஷ பாம்பணையை அனந்தன் என்பவார்கள். கருடன், பெருமாள் ஏறிச் செல்லும் வாகனமாக கருதப்படுகிறது. அது போல விஷ்வக்சேனரை பெருமாளின் முதன்மைத் தளகர்த்தர் என்று சொல்வார்கள்.
பெருமாள் கோவில்களில், விஷ்வக்சேனர் சந்நிதி நிச்சயமாக இருக்கும். தமிழில் அவரை சேனை முதலியார், சேனாதிபதி ஆழ்வான் என்று அழைப்பார்கள். அவருடைய அனுமதியின்றி பகவான் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை என்றும் சொல்வது உண்டு. பொதுவாக எந்த பூஜையோ, வழிபாடோ, உற்சவமோ செய்வதாக இருந்தாலும், முதலில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்து விட்டுதான் மற்ற பூஜைகளைச் செய்வார்கள்.
ஆனால் வைணவத்தில், விஷ்வக்சேன ஆராதனையை முடித்து விட்டுத்தான் திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம், திருவீதிவலம் செய்வார்கள்.
பெருமாள் வீதி உலா வருவதற்கு முன் விஷ்வக்சேனர் வலம் வந்து, அனுமதி தந்த பிறகுதான் பெருமாள் வீதிகளில் எழுந்தருள்வார். விஷ்வக்சேனருடைய நட்சத்திரம் ஐப்பசியில் பூராடமாகும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐப்பசி பூராடம் வருகிறது. இன்று காலை 10.25 மணி முதல் நாளை காலை 8.47 மணி வரை பூராட நட்சத்திர நேரமாகும். இன்று விரதம் இருந்து இந்த நேரத்தில் அவரைப் போற்றி வணங்க எம்பெருமானுடைய அருள் பூரணமாக கிடைக்கும். எந்த முயற்சிகள் செய்தாலும் அவை அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எனவே இன்று விரதம் இருந்து விஷ்வக்சேனரை வழிபட மறக்காதீர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்