search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கோவை நாதேகவுண்டன் புதூரில் திரிசூல வடிவில் காலபைரவர் கோவில்
    X

    கோவை நாதேகவுண்டன் புதூரில் திரிசூல வடிவில் காலபைரவர் கோவில்

    • காலபைரவர் வழிபாடு மிகவும் தொன்மையானது.
    • காலபைரவரை வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும்

    கோவை நாதேகவுண்டன் புதூரில் திரிசூல வடிவில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குறித்து தர்மராஜா சுவாமிகள், அன்னதானமடாலயம் நிறுவனர் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கூறியதாவது:

    காலபைரவர் வழிபாடு மிகவும் தொன்மையானது. காலபைரவரை வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது உண்மை. காலபைரவருக்கு முதன்முறையாக கோவை ஆலாந்துறை அருகில் உள்ள நாதேகவுண்டன்புதூரில் திரிசூல வடிவில் முதன்முறையாக கோவில் அமைக்கப்படுகிறது.

    இங்கு 9 அடி உயரத்தில் ஐம்பொன்னில் காலசம்காரீஸ்வர பைரவர் சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் இக்கோவிலில் அஷ்ட பைரவர், விநாயகர் பெருமான், சிவபெருமான், மதுர காளியம்மன், சனீஸ்வர பகவான், 27 நட்சத்திர சுவாமிகள், 12 ராசிகள் சுவாமிகள் மற்றும் 9 நவக்கிரக சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    இந்த கோவில் அமைக்கும் திருப்பணிகளை ஸ்ரீமத் தர்மராஜா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது. தற்போது மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மேற்கண்ட இடத்தில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இந்த கோவில் அமைவதற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்குமாறு ஸ்ரீமத் தர்மராஜா அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், ஸ்ரீமத் தர்மராஜா அறக்கட்டளை நிறுவனர் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×