search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி பவுர்ணமி: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    ஆடி பவுர்ணமி: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    • காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது.
    • விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது அமாவாசை பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 19-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 19-ந்தேதி ஆடி மாத பிரதோஷம், இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவு முதல் சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர ஊர்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் தாணிப்பாறைக்கு வருகை தந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்பகுதியில் குவிந்தனர்.

    இதனையடுத்து காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்து மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.

    அதன் பின்பு பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு சென்றனர் தற்போது விடுமுறை தினமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறு கிறது.

    அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×