என் மலர்
விருதுநகர்
- நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர்
- இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்றார்.
கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார் எனத் தெரிவித்திருந்தார்.
- 2 இடங்களிலும் ஆசிரமம் கட்டப்பட்டு நித்யானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
- ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களை வெளியேற்றி ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான 2 நிலங்கள் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாம். இந்த 2 இடங்களிலும் ஆசிரமம் கட்டப்பட்டு நித்யானந்தா சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நித்யானந்தா மீது எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, அந்த தான பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி தானமாக வழங்கிய நபர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை இரு தரப்பை சேர்ந்தவர்களும் பயன்படுத்தக்கூடாது என ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களை வெளியேற்றி ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த சீலை உடைத்து ஆசிரமத்திற்குள் சீடர்கள் சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் அளித்த புகாரின் பேரில் சீடர்கள் உதயகுமார், தீபா, பிரேமா, தாமரைச்செல்வி, ரேவதி, நித்திய சாரானந்தசாமி, நித்திய சுத்த ஆத்மானந்தா சாமி ஆகிய 7 பேர் மீது ராஜபாளையம் தெற்கு மற்றும் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
- அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்த மேயர் சங்கீதா இன்பம் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி வெளியேறினார்.
- கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டம் முடிந்து விட்டதாக கூறிவிட்டு மேயர் வெளிநடப்பு செய்தது தவறு என்றனர்.
சிவகாசி:
சிவகாசி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்றான வீட்டு மனை அங்கீகாரம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது பேசிய 14-வது வார்டு கவுன்சிலர், எங்களது வார்டுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்த மேயர் சங்கீதா இன்பம் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி வெளியேறினார். இருந்தபோதிலும் அரங்கில் இருந்த கவுன்சிலர்கள் மேயர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. துணை மேயர் மற்றும் ஆணையாளர் இணைந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் கூட்டம் நடத்துகின்றனர். கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டம் முடிந்து விட்டதாக கூறிவிட்டு மேயர் வெளிநடப்பு செய்தது தவறு என்றனர்.
இதற்கிடையே ஆணையாளர் பேசுகையில், கவுன்சிலர்கள் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். துணை மேயர், 4 மண்டல தலைவர்கள் உட்பட 34 கவுன்சிலர்கள் கூட்டத்தில் அமர்ந்து வெளியே செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கவுன்சிலர்களை மதிக்காமல் மேயர் கூட்ட அரங்கை விட்டு வெளியே சென்றது தவறு என்றும், தொடர்ந்து இதுபோன்ற நடைபெறுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.
இதற்கிடையே வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்கும் தீர்மானம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்று ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஆனாலும் அதனை ஆணையாளர் எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி கூட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே மேயர் அரங்கத்தை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது.
- பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இன்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டும், 13-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டும் இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி செவ்வாய் பிரதோஷமான இன்று காலை 6.40 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப்பட்டது. காத்திருந்த பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். வத்திராயிருப்பு மற்றும் மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்தது.
மேலும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக சதுரகிரிக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- விபத்தில் இரண்டு லாரியின் ஓட்டுனர்களுக்கு காயம் எதுவும் இல்லை.
- விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மதுரை-தூத்துக்குடி நான்கு வழி புறவழிச்சாலையில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் இன்று அதிகாலை லாரி ஒன்று தஞ்சாவூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திற்கு மருத்துவ கியாஸ் (ஆக்சிஜன்) ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
சாலையோரத்தில் அந்த லாரி நின்று கொண்டிருந்த போது கொல்கத்தாவில் இருந்து தூத்துக்குடிக்கு பனை ஓலை கைவினை பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்காக வந்த மற்றொரு லாரி எதிர்பாராத விதமாக கியாஸ் ஏற்றி வந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு லாரியின் ஓட்டுனர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் லாரியில் இருந்த கியாஸ் டேங்கரில் இருந்து வாயு கசிந்தது. இதுகுறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு காவல்துறையினர் விரைந்து வந்து கியாஸ் கசிவை தடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
- நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
* கட்சியில் மரியாதை வேண்டும் என கேட்பவர்கள் கட்சிக்கு செய்தது என்ன?
* தடை இருந்தால வெட்டி எறிந்து விடவும் தயங்க மாட்டேன்.
* பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான்.
* போகிற போக்கில் மிதித்து தள்ளி விடுவேன்.
* எனக்குள் ஓடுவது அ.தி.மு.க. ரத்தம். உன் உடலில் ஓடுவது என்ன ரத்தம்?
* வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன்.
* நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது.
* நான் இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை போட்டால் நான் வேடிக்கை பார்ப்பதா?
* தன்னை குறுநில மன்னன் என விருதுநகரில் வந்த கூற முடியுமா? என்று கூறினார்.
- கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது.
- 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூர் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் நலிவடைந்து வருகிறது. பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க போராட வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் உடனே நிவாரண நிதி வீடு தேடி வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது. இது தான் தி.மு.க. அரசின் சாதனை. சிவகாசியில் சுற்றுச்சாலை திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நிதி ஒதுக்கினார். ஆனால் அந்த திட்டம் 2 நாளைக்கு முன்னர் தான் பூமிபூஜை போடப்பட்டு தொடங்கப்படுகிறது.
2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள். எம்.பி. தேர்தலில் இந்த தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று இருக்க வேண்டும். தில்லுமுல்லு செய்து அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த பகுதியில் உள்ள தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் 18-ம் படி கருப்பசாமியாக வழித்துணை வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா, மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ், மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்த நிர்வாகிகள் முண்டியத்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக்கொண்டு வந்த நிர்வாகியை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், அதில் சேருவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பல்வேறு தவணை மூலம் மர்ம நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ரூ.67 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் உங்களது மனைவிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், அதில் சேருவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய செல்வராஜ் பல்வேறு தவணை மூலம் மர்ம நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ரூ.67 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளார். பணம் பெற்று கொண்ட பின் வேலை குறித்து எந்த தகவலும் இல்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராஜ் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதிராஜா, முநியாக, செல்வ குமார், போலீஸ்காரர் பொன்பாண்டி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில் அரசு வேலை வாங்கிய தருவதில் மோசடி செய்தவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கனாபுரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் கவின் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார்.
- 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் பனைவெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்தது சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர்.
இன்று அதிகாலை வரை நடந்த இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்திருந்தனர்.
மகா சிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
- அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 28-ந்தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே சதுரகிரிக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பஸ் கார், வேன் மூலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரமான தாணிப்பாறையில் தங்கி அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சிவராத்திரி என்பதால் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிய தொடங்கினர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக மலையேறினர். சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாரை சாரையாக சென்றனர். 4 முதல் 5 மணி நேரம் நடந்து சென்று பக்தர்கள் சுந்தர, சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கோவில் பகுதி மற்றும் அடிவாரத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகள் நடைபெற்றன. இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இரவில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
- இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் மலை அடி வாரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாக தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.
இன்று காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் மலையேறினர். 4 முதல் 5 மணிநேரம் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்
நாளை (26-ந் தேதி) இரவு சிவராத்திரி நாளை மறுநாள் மாசி மாத அமாவாசையை (28-ந் தேதி) முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள். இதை யொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சிவராத்திரைய முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
வத்திராயிருப்பு:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், மாசி மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளன.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.