search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்று வருந்துகிறீர்களா? இப்படி செய்து பாருங்க!
    X

    வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்று வருந்துகிறீர்களா? இப்படி செய்து பாருங்க!

    • வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும்.
    • இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    திருமணத் தடை உள்ளவர்கள், தங்களின் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, அதற்கேற்ற சிறப்பு தலங்களைத் தேர்ந்தெடுத்து தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும்.

    'வாழ்க்கைத் துணை அமையவில்லையே', 'வயதாகிக் கொண்டே போகின்றதே', 'வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே' என்று கவலைப்படுபவர்கள், பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால் இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    அந்த வகையில் திருமணஞ்சேரி திருத்தல வழிபாடு, உங்களுக்கு தித்திக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    சுக்ர சேஷத்திரமான திருவரங்கம், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள் வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்புரியும் திருப்புல்லாணி, வள்ளி மணவாளன் அருளும் சிறுவாபுரி, தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டால் இல்லறம் நல்லறமாக முடியும்.

    குரு பலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே. குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். 'வானவருக்கு அரசனான வளம் தரும் குருவே' என்ற குரு கவசத்தை குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும்.

    Next Story
    ×