search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வாழ்வில் வளம் சேர்க்கும் அட்சய திருதியை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வாழ்வில் வளம் சேர்க்கும் அட்சய திருதியை

    • பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார்.
    • இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர்.

    விவசாய நாடான இந்தியாவில் குறிப்பாக கிழக்கு இந்தியாவில் அட்சய திருதியை நன்னாளை முதல் உழவு நாளாக தொடங்குகின்றனர். அட்சய திருதியை நன்னாளில்தான் கடவுளர்களின் பொருளாளர் பதவியை ஏற்று குபேரர் லட்சுமி தேவியை வணங்கி போற்றினார்.

    புதிய தொழில் தொடங்குவதற்கும் வீட்டின் கட்டுமான பணியை ஆரம்பிப்பதற்கும் மிகவும் சிறப்பான நாளாக அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாள் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள் இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் அதிக அளவிற்கு பொருள் சேரும் என இந்த குறிப்பிட்ட நாளில் தங்க ஆபரணங்களை வாங்க மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாளின் சிறப்பு என்னவென்றால் விநாயகர் மகாபாரதம் எழுதத் தொடங்கிய நாள். பரசுராமர் அவதரித்த தினம்.

    பாண்டவர்கள் வனவாசம் செய்யும்போது கடவுள் அவர்களுக்கு அள்ள அள்ள உணவு குறையாத அட்சயபாத்திரம் அளித்தார். அன்னபூரணி தேவி பிறந்த நாளும் இதுவே. என இந்த நாளுக்கும் அட்சய என்கின்ற பதத்திற்கும் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்கிர பட்சத்தில் மூன்றாவது நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்துக்களும் ஜைனர்களும் இந்த நாளை மிக புனிதமான நாளாக கொண்டாடுகின்றனர் பலர் திருமணங்களை இந்த நாளில் முடிவு செய்கின்றனர்.

    இந்த நன்னாளில் நாம் செய்கின்ற நற்காரியங்களும் நமக்கு பல மடங்கு வாழ்வில் நன்மை பயக்கும் மேலும் தொடர்ந்து நல்ல செயல்கள் பல செய்யக்கூடிய சூழலை நம் வாழ்வில் ஏற்படுத்தி எல்லா வளங்களையும் இறைவன் நமக்கு அருள்வார். எனவே தான் இந்நன்னாளில் மக்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து மகிழ்கின்றனர் குறிப்பாக அட்சய திருதியை கடும் கோடையில் வருவதால் பலர் நன்னாளில் தங்களால் முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பானகம் மோர் விநியோகிக்கின்றனர். தண்ணீர் பந்தல் அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×