search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அம்மனாடும்தேரி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது
    X

    அம்மனாடும்தேரி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

    • தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • இன்று சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை நடக்கிறது.

    கீழ்குளம் பறம்பு அம்மனாடும்தேரியில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா முதல் நாள் தொடங்கி தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதிஹோமம், மாலை 5.30 மணிக்கு சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை, பூஜை பலி, உத்வஸிதத்து ஜீவ கலசத்திற்கு சுற்று எழுந்தருளல், பள்ளி உறக்கம் ஆகியவை நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கணபதிஹோமம், பிரதிஷ்டை ஹோமம், பள்ளி எழுப்பல், பிரதிஷ்டை பலி, மூர்த்திகள் கோவிலுக்குள் எழுந்தருளுதல், காலை 6 மணிக்கு பிரதிஷ்டை, தொடர்ந்து பகவதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீவ கலச அபிஷேகம், அஷ்ட பந்தன கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு வாழ்த்தரங்கம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×