என் மலர்
வழிபாடு

காரைக்கால் தர்கா கந்தூரி விழா: சந்தனக்கூடு ஊர்வலம்
- விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- நாளை கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்ஹா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 200-வது கந்தூரி விழா, கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய விழாவான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
முன்னதாக பள்ளிவாசலில் இருந்து இரவு 11 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு, காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அதிகாலை மீண்டும் பள்ளிவாசலை சென்றடைந்தது. விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
நாளை(செவ்வாய்க்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.
Next Story






