search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கருங்காலி மாலை-செங்காலி மாலை எது சிறந்தது...?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கருங்காலி மாலை-செங்காலி மாலை எது சிறந்தது...?

    • கருங்காலி மாலைகள் அணிந்துகொள்வது ஒரு டிரெண்டாகி விட்டது.
    • செங்காலிமாலைகள் அணிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சமீப காலமாகவே கருங்காலி மாலைகள் அணிந்துகொள்வது ஒரு டிரெண்டாகி விட்டது. சினிமா பிரபலங்கள் பலர் கருங்காலி மாலைகளை அணிந்து வலம்வர, பலரும் அதை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

    கருங்காலி மாலைகள் அணிந்துகொண்டால் கண் திருஷ்டி ஏற்படாது, அதிர்ஷ்டம் கைகூடும், செல்வ வளம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோன்று தற்போது செங்காலிமாலைகள் அணிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இந்து மத சம்பிரதாயத்தில், அணியும் மாலைகளில் ருத்திராட்ச மாலை, துளசி மாலை, கருங்காலி மாலை என பல வகைகள் உள்ளன. இதில் சமீப காலமாக கருங்காலி மாலைகள் குறித்த பதிவுகளும், விற்பனையும் சமூக வலைதளங்களில் களைகட்டி வருகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் சேரும் என்று யாரோ கிளப்பி விட அதனால் கருங்காலி மாலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் ஒரிஜினல் கருங்காலி மாலை என ஆயிரங்களில் மாலைகளை விற்பதும் நடந்து வருகிறது.

    இந்த கருங்காலி மாலைக்கான டிமாண்டை கண்டு அடுத்து செங்காலி மாலையும் சந்தைகளில் நல்ல விற்பனையாகி வருகிறது. ஆனால் ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் கருங்காலி மாலை நேர்மறை ஆற்றலை அதிகரிக்குமே தவிர, செல்வ விருத்தி அளிக்காது என்றும் கூறி வருகின்றனர்.

    கருங்காலி, செங்காலி ஆகிய இரண்டு மரங்களும் ஒரே தன்மை உடையவைதான். ஆன்மிக அடிப்படையில் கருங்காலி மிருக சீரிட நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்றால் செங்காலி திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்கிறார்கள். செங்காலி மாலைகளும், கருங்காலி மாலைகளுக்கு இணையான பலன் தரும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் தற்போது செங்காலி மாலைகளை அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.

    கருங்காலி மாலைகளைப் போல் செங்காலி மாலைகள் அணிந்துகொள்வதும் அதிர்ஷ்டம் தருமா... செங்காலி மாலைகளுக்கு ஆன்மிக முக்கியத்தும் உண்டா போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

    ஆன்மிக மரபில் இயற்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இறைவழிபாட்டை போலவே இயற்கை வழிபாடும் முக்கியமானது என்று நம் முன்னோர்கள் கருதியதே அதற்கு காரணம்.

    அந்த வகையில் கருங்காலி மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த மரங்களாகக் கருதப்பட்டன. கருங்காலி என்று சொல்கிறபோதே அதில் செங்காலியும் அடக்கம். இரண்டுக்கும் சிறு வேறுபாடு உண்டு. கருங்காலி மரங்கள் மிகவும் உறுதியானவை. செங்காலி கருங்காலியை விடக் கொஞ்சம் உறுதித் தன்மை குறைந்தது. அதனால்தான் ஆயுதங்கள் செய்யும்போது கருங்காலியை நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெரும்பாலும் அந்த கால ஆயுதங்களான ஈட்டி, கோடாரி ஆகியவற்றின் பிடிகளை கருங்காலியிலேயே செய்தார்கள்.

    இப்படி பல காரணங்களுக்காகவே கருங்காலி மற்றும் செங்காலிகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று இவை ஆன்மிக முக்கியத்துவம் கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன.

    கருங்காலி, செங்காலி ஆகிய இரு மரங்களும் வசியத் தன்மை கொண்டவை என்று நம்பப்படுகின்றன. அந்த காலத்தில் குறிசொல்கிறவர்கள் கைகளில் வைத்திருக்கும் கம்பு கருங்காலி மரமே. கருங்காலி, செங்காலி இரண்டிலுமே அந்த காலத்தில் மாலைகள் செய்து அணிந்துவந்தார்கள். அதற்கு அதன் மருத்துவப் பயன்பாடே முக்கிய காரணம்.

    Next Story
    ×