search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தெய்வீக அம்சம் நிறைந்த நால்வகை திருநீறு!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தெய்வீக அம்சம் நிறைந்த நால்வகை திருநீறு!

    • உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும்.
    • அவ்வையார் 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது. சிறப்புமிக்க அந்தத் திருநீற்றை, தலை முதல் கால் வரை, உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும் என்று வரைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருஞானசம்பந்தர், திருநீற்றின் சிறப்பைப் பற்றி 'திருநீற்றுப் பதிகம்' பாடல் தொகுப்பையே வழங்கியிருக்கிறார். 'மந்திரமாவது நீறு..' என்று தொடங்கும் அந்த பதிகப் பாடல், கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்குவதற்காக, ஞானசம்பந்தரால் பாடப்பட்டது ஆகும். அவ்வையாரும் கூட 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    அந்த திருநீறானது, 'கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம்' என்று நான்கு வகைப்படும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    * கன்றுடன் ஆரோக்கியமாக வாழும் பசுவின் சாணம், கீழே விழும் முன்பாக, தாமரை இலையில் பிடித்து, வேதமந்திரங்கள் ஓதி, முறைப்படி தாயரிக்கப்படுவது 'கல்ப திருநீறு.'

    * பசுமை நிறைந்த புற்களை மட்டுமே மேயும், பசுக்களின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவது 'அனுகல்ப திருநீறு' ஆகும்.

    * ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் பசுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் சாணத்தை, அக்னியில் எரித்துக் கிடைப்பதுவே 'உபகல்ப திருநீறு.'

    * வெவ்வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் சாணத்தைக் கொண்டு தயார் செய்யப்படுவது, 'அகல்ப திருநீறு.'

    Next Story
    ×