என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
- 31-ந்தேதி இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடக்கின்றன.
- 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 24-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 4 -ந் தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று சந்திரசேகரர், அம்பாள், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் வீரகேசரி, வீரபாகுவுடன் மலைக்கோவிலில் இருந்து படியிறங்கி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தினமும் இருவேளையும் சந்திரசேகரர், வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் திருவீதி உலா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வள்ளி- தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் சண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் மற்றும் கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்யும் நிகழ்ச்சியும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் சண்முகர் வீதிஉலா வந்து கோவிலை வந்தடைகிறார்.
31-ந் தேதி காலை சண்முகர் காவிரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சியும், அன்று இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடக்கின்றன. அதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு பஸ் வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் மற்றும் சச்கர நாற்காலி வசதி, மருத்துவ வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர், ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்