என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
- நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.
- சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்ப யாகம் நடந்தது. சுவாமி, தாயார் உற்சவர்கள் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.
14 வகையான நறுமண மலர்கள் மற்றும் 6 வகையான இலைகளுடன், மலையப்ப சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு புஷ்ப அர்ச்சனையும், வண்ண மலர்கள் மற்றும் இலைகளுக்கு நடுவே சுவாமி, தாயார்களுக்கு புஷ்ப யாகமும் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கலந்து கொண்டார்.
வேத பண்டிதர்கள் ருக்வேதம், சுக்லயஜுர்வேதம், கிருஷ்ண யஜுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம், பாராயணம் செய்தனர். முன்னதாக பூக்களை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
15-ம் நூற்றாண்டு முதல் புஷ்பயாகம் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு நிறுத்தப்பட்டு 1980-ம் ஆண்டு முதல் மீண்டும் புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நன்கொடையாளர்கள் புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 9 டன் மலர்கள் வழங்கினர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்