search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வழிபாடுகளும்.... அதன் பலன்களும்!
    X

    வழிபாடுகளும்.... அதன் பலன்களும்!

    • செவ்வாய்க்கிழமை நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபடலாம்.
    • குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடலாம்.

    * குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    * கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    * ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

    * வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

    * மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

    * பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வந்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

    Next Story
    ×