search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வயிற்றுப்புண்களை ஆற்றும் அகத்திக்கீரை தேங்காய்ப்பால் கிரேவி
    X

    வயிற்றுப்புண்களை ஆற்றும் அகத்திக்கீரை தேங்காய்ப்பால் கிரேவி

    • அகத்திக்கீரைக்கு உடலில் உள்ள வெப்பத்தை அகற்றும்.
    • லேசான கசப்பு தன்மை உடையது.

    அகத்திக்கீரைக்கு உடலில் உள்ள வெப்பத்தை அகற்றும் தன்மையுள்ளதால் இந்த கீரை அகத்தி கீரை எனப்படுகிறது இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்றில் வெள்ளை நிற பூ பூக்கும். மற்றொன்று சிவப்பு நிறத்தில் பூக்கும்.

    இந்த கீரையில் பலவகை யான சத்துக்கள் உள்ளன. இது லேசான கசப்பு தன்மை உடையது. இதன் பூக்களும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

    வயிற்றுப் புண்களை ஆற்றும் திறன் இந்த கீரைக்கு உண்டு. இதை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும். வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் சத்தும் இதில் உள்ளது. இரும்பு, சுண்ணாம்பு சத்துக்களும் நிறைந்துள்ளது.

    கண் பார்வையை அகத்திகீரை துல்லியமாக்கும். அதனால் இது மாலை கண் நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

    தேவையான பொருட்கள்:

    அகத்திகீரை- ஒரு சிறிய கட்டு

    சிறிய வெங்காயம்- 100 கிராம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)

    சீரகம்- 1 தேக்கரண்டி

    மிளகுபொடி- 1/2 தேக்கரண்டி

    தேங்காய் துருவல்- ஒரு கப்

    உப்பு- தேவைக்கு


    செய்முறை:

    தேங்காய் துருவலை அரைத்து 200 மி.லி நீரில் கலந்து வடிகட்டி முதல் தேங்காய் பால் எடுக்க வேண்டும். பின்னர் மறுபடியும் 200 மி.லி நீர் கலந்து வடிகட்டி இரண்டாம் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடிகனமான பாத்திரத்தை எடுத்து இரண்டாம்முறை எடுத்த பாலை ஊற்ற வேண்டும். அதில் அகத்திகீரை, சீரகம், மிளகுத்தூள் கலந்து நன்கு வேக வைக்க வேண்டும்.

    இந்த கலவை நன்கு வெந்தவுடன் முதலில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். அதன்பிறகு உப்பும் கலந்து இறக்கிவிட வேண்டும். தேங்காய்பாலில் வேகவைப்பதால் கசப்புத்தன்மை தெரியாது.

    இந்த கூட்டில் உள்ள தேங்காய் பாலை மட்டும் வடிகட்டி 50 மி.லி. அளவு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற பூச்சிகள் அழியும். இதை மாதம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் கருப்பையில் உள்ள புண்களுக்கும் இந்த கூட்டு சிறந்த மருந்து.

    Next Story
    ×