search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    ஓணம் சத்யா ஸ்பெஷல்: ஓலன்
    X

    ஓணம் சத்யா ஸ்பெஷல்: ஓலன்

    • ஓணம் சத்யா விருந்தில் பல்வேறு சுவையான ரெசிபிக்கள் சமைக்கப்படும்.
    • இன்று இதில் ஒன்றான ஓலன் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    நீர் பூசணி/வெள்ளை பூசணி - 1 1/2 கப்

    தட்டைப்பயறு - 1-2 கப்

    பச்சை மிளகாய் - 2

    மிகவும் நீர் போன்ற தேங்காய் பால் - 1 கப்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் எண்ணெய் - 1 டீபூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    * பச்சை மிளகாயை நீளவாக்கி நறுக்கி கொள்ளவும்.

    * நீர் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    * தட்டை பயறை நீரில் ஒரு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, பின் அதை குக்கரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் ஊற்றி, அத்துடன் ஒரு கப் நீர் போன்றுள்ள தேங்காய் பால் ஊற்றி, அதோடு நீர் பூசணிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, காயை நன்கு வேக வைக்க வேண்டும்.

    * நீர் பூசணி நன்கு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, பின் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பே அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் ஊற்றினால், ஓணம் சத்யா ஸ்பெஷல் ஓலன் தயார்.

    குறிப்பு

    * நீர் பூசணிக்காய் மற்றும் தட்டைப் பயறு நன்கு மென்மையாக வெந்திருந்தால் தான், அது தேங்காய் பாலை நன்கு உறிஞ்சியிருக்கும்.

    * கெட்டியான தேங்காய் பால் சேர்த்த பின் நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது திரிய ஆரம்பித்துவிடும்.

    * சமைத்து முடித்த பின் குறைந்தது அரை மணிநேரம் கழித்து சாப்பிட பரிமாறினால் தான், தேங்காய் பாலுடன் காய்கறிகள் நன்கு ஊறி இருக்கும்.

    Next Story
    ×