search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சருமத்தை மென்மையாக்கும் கடலை மாவு ஃபேஸ்பேக்
    X

    சருமத்தை மென்மையாக்கும் கடலை மாவு ஃபேஸ்பேக்

    • சருமத்திற்கு இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது.
    • கடலை மாவு ஃபேஸ் பேக் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

    சருமம் வறட்சியாக இருக்கும்போது சருமத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுக்க கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை பயன்படுத்தலாம். மேலும் இது முகப்பரு பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது.

    செய்முறை:

    1 டீஸ்பூன் கடலை மாவு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை பேஸ்ட் வடிவில் வரும் வரை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தடவி, 20 நிமிடங்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

    சருமத்திற்கு இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

    சிலருக்கு முகத்தில் உள்ள துளைகள் திறந்தே இருக்கும். இதை சரிசெய்ய 1 டீஸ்பூன் உளுத்தம் மாவு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து சிறிது பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள துளைகள் விரைவில் மூடி விடும்.

    Next Story
    ×