search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அதிக வட்டி அளிக்கும் `மகிளா சேமிப்பு திட்டம்
    X

    அதிக வட்டி அளிக்கும் `மகிளா சேமிப்பு திட்டம்'

    • பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது.
    • குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது.

    குழந்தைகள், முதியவர்களுக்கு என்று பல்வேறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகம் வழங்குகிறது.

    அதேபோல பெண்களுக்காக தனிப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டங்களையும் அளிக்கிறது. அவற்றில். `மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    பெண்களுக்காக சிறப்பாக தொடங்கப்பட்ட திட்டமான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குறுகிய காலத்திலேயே அதிக வட்டியை அரசு வழங்குகிறது. அதாவது 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது.

    மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. குறுகிய காலத்திலேயே இந்த திட்டம் மிகவும் பிரபலமாகி விட்டது. இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    பெண்கள் சுயமாக வாழ்க்கை நடத்த உதவும் நோக்கில் இந்த திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு கூடுதல் வட்டி அளிப்பதோடு, வருமான வரி பிரிவு 80 சி-யின்படி வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. மற்றொரு முக்கிய அம்சம், இதில் 10 வயது மற்றும் அதற்கும் குறைவான பெண் குழந்தைகள் பெயரிலும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    அடுத்த ஆண்டு (2025) மார்ச் 31-ந்தேதிக்கு முன்போ, அன்றைய தினமோ இந்த திட்டத்தில் பெண்கள் கணக்கை தொடங்கலாம்.

    தபால் அலுவலகம் தவிர, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் 4 தனியார் வங்கிகளிலும் இந்த கணக்கை ஆரம்பிக்கலாம்.

    Next Story
    ×