search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    எக்டோபிக் கர்ப்பத்தால் உண்டாகும் ஆபத்துகள்
    X

    எக்டோபிக் கர்ப்பத்தால் உண்டாகும் ஆபத்துகள்

    • கருக்குழாயில் கரு தங்கும் முறைக்கு எக்டோபிக் கர்ப்பம் என்று பெயர்.
    • அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம்.

    கருக்குழாயில் கரு தங்கும் முறை எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கர்ப்பத்தின் போது கருவுற்ற முட்டை கருப்பையுடன் இணைக்காது.

    சில நேரங்களில் கருவானது ஃபெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாய் பாதையில் நிலைபெற்று வளரத்தொடங்குகிறது இதை கருக்குழாய் கருத்தரிப்பு என்று சொல்லப்படும்.

    சில நேரங்களில் இன்னும் அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம். இது கவலைக்குரிய நிலை என்பதோடு வலி, ரத்தப் போக்கு, வெடிப்புகளை உண்டாக்கி விடக்கூடும் என்பதால் இந்த கருக்குழாயில் குழந்தை தங்கும் ஆபத்து குறித்து முழுமையாக அறிவது அவசியம்.

    காரணங்கள்:

    * முந்தைய கர்ப்பம் எக்டோபிக் கர்ப்பமாக இருந்தால்

    * தொற்று அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஃபெலோப்பியன் குழாய்களின் வீக்கம் மற்றும் வடு

    * ஹார்மோன் காரணிகள்

    * மரபணு அசாதாரணங்கள்

    * பிறப்பு குறைபாடுகள்

    * ஃபலோபியன் குழாய்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் வடிவம் மற்றும் நிலையை பாதிக்கும்

    * புகைபிடிப்பது

    அறிகுறிகள்

    * இடுப்பு, தோள்பட்டை அல்லது கழுத்து பகுதியில் கூர்மையான வலி

    * அடிவயிற்றின் பக்கத்தில் ஏற்படும் கடுமையான தாங்க முடியாத வலி

    * லேசானது முதல் கனமான யோனி போக்கு

    * மயக்கமான உணர்வு

    * மலக்குடல் அழுத்தம் உணர்வு

    * கருவுற்று இருக்கும் போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை தாமதிக்காமல் தொடர்பு கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சை அவசியம்.

    இந்த எக்டோபிக் கரு குறித்த சந்தேகம் கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடல் பரிசோதனை மூலம் எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிய முடியாது.

    டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் யோனிக்குள் சிறிய கருவி செருகப்படும். அப்போது மருத்துவர் கருப்பையில் கரு உள்ளதா என்பதை பார்க்க முடியும்.

    உங்கள் ஹெச். சி. ஜி. மற்றும் புரோஜெஸ்ட்ரான் அளவை கண்டறிய மருத்துவர் ரத்த பரிசோதனையை பயன்படுத்தலாம். இது கர்ப்பகாலத்தில் இருக்கும் ஹார்மோன்கள் ஆகும்.

    இந்த ஹார்மோன் அளவு குறைய ஆரம்பித்தால் அல்லது ஒரு சில நாட்களில் ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கர்ப்பகால சாக்கு அதாவது அம்னோடிக் திரவம் இல்லையென்றால் அது கருக்குழாயில் கரு தங்கியதற்கான காரணம் ஆகும்.

    கருக்குழாய் கரு தங்கினால் உண்டாகும் ஆபத்துகள்?

    கருமுட்டை விந்தணுக்களுடன் இணைந்து கருக்குழாயில் தங்கி பிறகு அதன் வழியாக பயணித்து கருப்பைக்குள் உள்வைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் கரு வளர்ச்சி சீராக இருக்கும்.

    கரு ஃபலோபியன் குழாய் வழியாக மட்டுமே வளர்ந்தால் கரு வளராது. அதனோடு கருக்குழாயும் வெடிக்க செய்யலாம்.

    மேலும் தீவிர நிகழ்வுகளில் உடைந்து கடுமையான உள் ரத்தப்போக்கு ஏற்படலாம். சற்று அலட்சியம் செய்தாலும் அவை உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

    இந்த கருவானது தாய்க்கு பாதுகாப்பானது அல்ல. மெலும் கருவை கர்ப்பகாலம் முழுவதும் வளர்க்க முடியாது. தாயின் உடனடி ஆரோக்கியம் காக்க உடனடியாக கருவை அகற்றுவது அவசியம்.

    இந்த சிகிச்சை முறையில் எக்டோபிக் கர்ப்பம் இருக்கும் இடம் மற்றும் அதன் வளர்ச்சியை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

    சில நேரங்களில் கருக்குழாயில் கரு வளர்ச்சியை பொறுத்து அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் கருவை அகற்றி ஃபலோபியன் குழாய் சேதத்தை சரி செய்ய பரிந்துரைப்பார்கள். இது இலேபரோடமி என்று அழைக்கப்படுகிறது.

    Next Story
    ×