என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
    • புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நியமனங்கள் செய்யப்படவில்லை.

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு துணை தாசில்தார், மருந்தாளுநர், சுகாதார உதவியாளர், வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. ஆனால் எந்த அறிவிப்பிலும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.

    இதேபோல் சுகாதார துறையின் மருந்தாளுநர் பதவிக்கு வயது வரம்பில் தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக புதுவையில் அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒருமுறை வாய்ப்பாக வயது தளர்வு தர வேண்டும்.

    ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று எங்களை நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வினை அனுமதிக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கு, கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.

    அப்போது கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு நேரடி நியமனம் நடத்தப்படாத நிலையில், இவர்களுடைய கோரிக்கையை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் அந்த மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை 2 வாரத்திற்குள் கவர்னர் பரிசீலனை செய்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை வருகிற 28-ந் தேதி ஒத்தி வைத்தனர்.

    புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. எனவே தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் 2 வாரத்திற்குள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது.
    • பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கைலாஷ் நாதனுக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது. தனது அதிகாரத்துக்கு உட்பட்ட துறையில் இயக்குனரை கூட நியமிக்க முடியாமல் முதலமைச்சராக பதவியில் தொடர்வது தேவையா? என ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை வழக்கம் போல கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் டென்னிஸ் விளையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆரோவில்லில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

    அங்கு அவரை துணை சபாநாயகர் ராஜவேலு, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் நமது விருப்பப்பட்டதை செய்ய முடியாத நிலை உள்ளது. சிறிய பிரச்சனைகளில் கூட கவர்னர் மாளிகையின் தலையீடு உள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    அப்போது, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம், உறுதுணையாக இருப்போம் என்று எம்.எல்.ஏ.க்கள் உறுதியளித்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து புறப்பட்டு, அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரின் வீட்டில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசினர்.

    அமைச்சர் திருமுருகன், காரைக்கால் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா ஆகியோரும் புதுவைக்கு விரைந்துள்ளனர். அமைச்சர் தேனீஜெயக்குமார் உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். கட்சியில் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக அவர் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்துள்ளார்.

    புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வரவில்லை.

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
    • பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்தநிலையில், புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது. பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

    • அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    முழுஅடைப்பின்போது புதிய பஸ் நிலையம், அரியாங்குப்பம், கன்னியக்கோவில், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, சேதராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பந்த் போராட்டத்தின்போது பஸ், ஆட்டோ, டெம்போ போன்றவற்றை இயக்கமாட்டோம் என்று ஏ.ஐ.சி.டி.யு., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. அதேநேரத்தில் அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

    போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அரசுத் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்துக்கு புதுவை அரசு ஊழியர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உரிய அனுமதியின்றி அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது நியமன விதிகளுக்கு எதிரானது ஆகும்.

    எனவே அரசுத்துறைகள், சார்பு நிறுவனங்கள், கழகங்கள், சங்கங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு அவசர தேவையின்றி விடுமுறை வழங்கக்கூடாது. உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது. அத்தகையவர்கள் மீது விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் பாதுகாப்பு பணியில் சட்டம் - ஒழுங்கு, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர் என 1,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
    • கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கூட்டணி அமைச்சரவையில் பா.ஜனதா சார்பில் அங்கம் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கான பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்தார். இதனை கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பா ஜனதா மாநில தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி. ராமலிங்கம் பா.ஜனதா மாநில தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை முறையாக அறிவிக்கப்படுகிறது.

    இவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) மாலை பதவி ஏற்க உள்ளனர். மாலை 4 மணிக்கு ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்கும் விழா கவர்னர் மாளிகையில் நடக்கிறது. அங்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அறையில் 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    தொடர்ந்து, முதலியார் பேட்டை சுகன்யா கன்வென்சன் சென்டரில் பா.ஜனதா புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு மற்றும் புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.

    விழாவில் பா.ஜனதா அகில இந்திய பொது செயலாளர் தருண் சுக், மேலிட பொருப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

    • புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார்.
    • ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.

    புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். பாஜக-வை சேர்ந்த இவர், ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார். காலியாக உள்ள அமைச்சர் பதவியை பாஜக எம்.எல்.ஏ. ஜான் குமாருக்கு வழங்க கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த மே மாதம் டெல்லி சென்றபோது உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    அப்போது புதிதாக அமல்படுத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கவும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் அறிவுறுத்தினார்.

    மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பிராந்திய மொழிகளில் போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் இதனை ஒருசில போலீஸ் நிலையங்கள் தவிர பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் பின்பற்றாமல் இருந்து வந்தன.

    இந்தநிலையில் புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங், புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். தமிழில் பதிவு செய்ய வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாளத்திலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன், வெளிப்படைத்தன்மையும் இருக்கும்.

    எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
    • அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வருவாயை பெருக்க கலால்வரி, நில வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது.

    கலால்வரி உயர்வால் புதுவையில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏற்கனவே கொள்முதல் செய்த மதுபானங்களுக்கு பொருந்தாது, அவற்றை பழைய விலைக்கே விற்க கலால்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால் விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலை கொண்ட ரூ.60 விலை கொண்ட குவார்ட்டர் மது ரூ.72 முதல் ரூ.74 வரை விற்கப்படுகிறது. அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.

    இதுபோல அனைத்து மதுபானங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மது பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் மதுபான விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த காலத்தைபோல தொடர்ந்து விற்பனை நடக்குமா? விலை உயர்வால் மது விற்பனை சரிவை சந்திக்குமா? என மது விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிய வந்த ஒருவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ நேற்று சமூக வலை தளங்களில் வைரலாகியது.

    மேலும் இந்த சம்பவம் கடந்த 16.10.24 அன்று நடந்ததாகவும் இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் பதிவாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீடியோவின் ஒரு பகுதியை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயசங்கர், கவர்னர், டி.ஜி.பி., கலெக்டர் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதன்பேரில் இப்புகார் குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத்துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்த லஞ்சம் மற்றும் சஸ்பெண்ட் விவகாரம் பத்திரப்பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குடியரசு துணை தலைவர் வருகையால் நடவடிக்கை.
    • ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.

    குடியரசு துணை தலைவர் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மதியம் 2 மணிக்குள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் ஜெகதீப் தன்கர் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
    • புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது.

    இந்த தடைக்காலத்தில் படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தடைக்காலத்தின்போது, பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி விசைப் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இன்றுடன் (சனிக்கிழமை) தடைக்காலம் முடிவடைவதால், படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், உள்ள விசைப்படகுகளுக்கு நேற்று பூஜை போட்டு சிறப்பு யாகம் நடத்தினர்.

    இந்த யாகத்தில், முதலமைச்சர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் 17-ந் தேதி வரை, வட தமிழக சுடலோர பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.
    • ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வெளியிட்டு மத்திய அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை பிடித்து 11 ஆண்டுகளை முடித்து 12-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி தலைமையிலான அரசின் கொள்கை முடிவுகளால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது கண்கூடாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் முடிவு எடுக்கும் தைரியமற்றவர்களாக இருந்தனர். அதோடு 2-ஜி, காமன்வெல்த் என அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் தலைவிரித்தாடியது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சேவை, சிறந்த நிர்வாகம், ஏழைகளின் நலன் ஆகியவற்றை முன்வைத்து நாட்டை சீரான வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

    நாடு சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை 2047-ல் அடியெடுத்து வைக்கும்போது வல்லரசாக்க திட்டமிட்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார். புதுச்சேரியிலும் பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட இலவச ரேஷன் அரிசியானது தற்போது ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டில் கிடப்பில் கிடந்த 750 ஏக்கர் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4000-ம் பேருக்கு அரசு வேலை தரப்பட்டுள்ளது. பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றும் பணி தொடர்கிறது.

    ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். உலகத்துக்கும் ஒரு செய்தி சொல்லியுள்ளோம்.

    மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார். 2026-ல் தேசிய ஜனநாயகக்கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. கூட்டணி கலகலத்து போயுள்ளது.

    இதனால் அந்த தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி பேசிவருகிறார்கள்.

    தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் சந்தித்து கணிச ன வாக்கு பெற்றுள்ளோம். தற்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலம் பெற்றுள்ளோம். இதனால் தி.மு.க.வினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.

    புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கருத்துகளை முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரிடம் தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.

    திராவிடர் கழகம் என்றாலே கலவரம்தான். அவர்கள் தங்களை போலவே பிறரையும் நினைத்து கலவரம் ஏற்படுத்த வருவதாக கூறுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு திருப்பரங்குன்றத் தில் நடந்த சம்பவத்தில் காயம் அடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். கூட்டணி பற்றி கட்சி தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். தமிழகம் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×