என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரி முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.

    தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.

    தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

    தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.

    தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெய்ப்பூர் RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு பா.ஜ.க. பெண் தொண்டர் நோயாளிக்குக் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டைப் புகைப்படம் எடுத்தவுடன் உடனடியாகத் திரும்பப் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உதவி செய்வது போல நடித்த பெண் பாஜக தொண்டரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்.
    • கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்

    இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.

    இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.

    பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. 

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • ஜெய்ப்பூர் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 37-28 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த போட்டியில் தபாங் டெல்லி சிறப்பாக விளையாடியது. இறுதியில் 47-26 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடத்துக்கு முன்னேறியது. புனேரி பல்தான் 2வது இடத்திலும், அரியானா ஸ்டீலர்ஸ் 3வது இடத்திலும் உள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • யு மும்பா அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி, யு மும்பா அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே தபாங் டெல்லி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், சிறப்பாக ஆடிய தபாங் டெல்லி அணி 47-26 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • குஜராத் அணியை தெலுகு டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

    இறுதியில், சிறப்பாக ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணி 30-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தெலுகு டைட்டன்ஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • முன்னாள் கணவருடன் பிறந்த குழந்தையை கேலி செய்ததால் விரக்தி.
    • குழந்தையை கொலை செய்தால்தான் காதலுடன் வாழ முடியும் என்பதால் கொடூர முடிவு.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி (வயது 28). இவர் கணவரை விட்டு பிரிந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது.

    அஞ்சலி அஜ்மீரில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணி புரிந்து வருகிறார். அதே ஓட்டலில் வேலைப் பார்க்கும் அல்கேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் Live-in பார்ட்னராக வசித்து வந்துள்ளது. இவர்களுடன் 3 வயது குழந்தையும் வசித்து வந்துள்ளது. அஞ்சலியின் குழந்தை அல்கேஷ்க்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. குழந்தையையும், அஞ்சலியையும் அல்கேஷ் கேலி செய்துள்ளார். இதனால் அஞ்சலிக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.

    அல்கேஷ் உடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், தனது மகளை கொலை செய்ய வேண்டும் என அஞ்சலி முடிவு செய்துள்ளார். இதனால், குழந்தையை தாலாட்டு தூங்க வைத்துள்ளார். பின்னர் தோளில் தூக்கிக் கொண்டு வசித்து வந்த இடம் அருகே உள்ள ஏரிக்கு சென்றுள்ளா்ர. ஏரியில் பெற்ற குழந்தை என்ற கூட பார்க்காமல் தூக்கி வீசியுள்ளார்.

    அத்துடன் நள்ளிரவில் குழந்தையை காணவில்லை என்று நடுரோட்டில் அங்கும் இங்குமாக அழைந்து தேடுவது போன்று நாடகமாடியுள்ளார். போலீசாருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட, கிடுக்குப்பிடி விசாரணையில் அஞ்சலி குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    அஞ்சலியை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஞ்சலியுடன் சேர்ந்து அல்கேஷும் குழந்தையை தேடியுள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்ந்து உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
    • தெலுகு டைட்டன்ஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

    இறுதியில், சிறப்பாக ஆடிய தபாங் டெல்லி அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி தான் ஆடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
    • யு.பி.யோதாஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

    இறுதியில், சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
    • காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னுவை சேர்ந்தவர் முகேஷ் குமாரி (வயது 37).

    இவர் அங்கன்வாடி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பர்மாரை சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தனர்.

    பின்னர் தங்களது செல்போன்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அப்போது மனோராம் முகேஷ் குமாரியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

    மனாராம், முகேஷ் குமாரியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனாராமை வற்புறுத்தி வந்தார். அவர் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் முகேஷ் குமாரி நேற்று முன்தினம் தனது காரை எடுத்துக்கொண்டு 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதலன் வீட்டுக்கு காரில் சென்றார். தங்களுடைய காதல் விவகாரம் குறித்து மனாராமின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    இதனால் மனாராம் ஆத்திரம் அடைந்தார்.

    முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் முகேஷ் குமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் காதலியின் உடலை தூக்கி முள்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து மனாராமை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் புனேரி பல்தான் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே புனேரி பல்தான் அணி சிறப்பாக விளையாடியது. இறுதியில் 39-33 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணி அபார வெற்றி பெற்றது.

    புனேரி பல்தான் அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் புனே அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

    ×