search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இலவசமாக பயணம் செய்ய அனுமதி: மெட்ரோ ரெயிலில் நேற்று ஒரு நாளில் 4 லட்சம் பேர் பயணம்
    X

    இலவசமாக பயணம் செய்ய அனுமதி: மெட்ரோ ரெயிலில் நேற்று ஒரு நாளில் 4 லட்சம் பேர் பயணம்

    • மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
    • அனைவரையும் டிக்கெட் எடுக்காமல் செல்ல அனுமதித்தனர்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் வீடு திரும்புவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டத்தால் நேற்று காலை முதல் மாலை வரை ஸ்தம்பித்தது.

    சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்ப பல மணி நேரம் நீடித்தது. பறக்கும் ரெயில், புறநகர் மின்சார ரெயில்களில் நெரிசலில் மக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில் சேவை நேற்று மக்களுக்கு மிகுந்த கை கொடுத்தது.


    3½ நிமிட நேரத்திற்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்பட்டதால் கூட்டத்தை சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., சென்ட்ரல், எழும்பூர் போன்ற மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    பயணிகள் கூட்டமாக வந்ததால் டிக்கெட் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. டிக்கெட் ஸ்கேனிங் எந்திரம் உடனுக்குடன் செயல்பட வில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாத ரெயில் நிலைய அதிகாரிகள், பணியாளர்கள் தடுமாறி னார்கள்.

    தொடர்ந்து அதிகரித்து வந்த கூட்டத்தை சமாளிக்க தடுப்பு கேட் அகற்றப்பட்டது. அனைவரையும் டிக்கெட் எடுக்காமல் செல்ல அனுமதித்தனர்.

    ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போது டிக்கெட் எடுக்க வேண்டும் என சிலர் கூறினார்கள். ஆனால் அங்கும் டிக்கெட் எடுக்காமல் பொதுமக்கள் வெளியே சென்றார்கள்.

    டிக்கெட் எடுக்க யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டதால் பொதுமக்கள் டிக்கெட் எடுக்காமல் சென்றனர். டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தால் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கும்.

    ஆனால் 5.45 மணி வரை சாகச நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களின் கூட்டம் இருந்ததாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக மெட்ரோ ரெயில்களில் கூட்டம் குறைவாக இருக்கும். சேவை குறைக்கப்படும்.

    ஆனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்திருக்கலாம் என்று மெட்ரோ ரெயில் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×