search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு ஜி.கே. வாசன் வாழ்த்து
    X

    கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு ஜி.கே. வாசன் வாழ்த்து

    • பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு.
    • மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

    தூத்துக்குடி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இயக்கம் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய்.

    இன்றைக்கு அவருடைய கட்சியினுடைய கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றுவதாக அறிவிப்பு வந்து இருக்கின்றது. மக்கள் பணி, இயக்கப் பணி, மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அந்த வகையில் மக்களின் நம்பிக்கையை பெறுபவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது உறுதி.

    புதிய கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    பாலியல் தொந்தரவு என்பது உலக அளவில் இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மிருகத்தனமான பாலியல்கள் செய்திகளை கேட்கும்போது வருத்தமாக இருக்கின்றது.

    இந்த பாலியல் சீண்டலில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருவது, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் யார் என்று முதல் நிலையிலே தெரிந்தாலே உடனடியாக அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான். அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படையில் பயம் இருக்கும்.

    சட்டம், ஒழுங்கு எங்கு கெடுவதாக இருந்தாலும் அதற்கு குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனுடைய தாக்கம் பாலியல் தொல்லைக்கும் வழி வகுக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு வேதனைக்கும், வருத்தத்திற்கு உரிய விஷயம். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று தெரிந்தால் நேரம், காலம் தாழ்த்தாமல் உடனடியாக 20 மணி நேரம், 48 மணி நேரத்தில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×