search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு-அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
    X

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு-அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

    • 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும்.
    • 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

    அவினாசி:

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து நீரேற்றத்துக்கான மோட்டார் இயக்கப்பட்டு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் குழாய்கள் மூலம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ள ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்ல ப்படுகிறது. இதனால் 3 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் ஏரிக்கு வந்த தண்ணீரை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்றாா்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் ஈரோடு பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை விநாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாள்களுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

    அந்த தண்ணீர் 1065 கிமீ., நீளத்துக்கு நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதன் மூலம் நீா்வளத் துறை சாா்பில் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும். 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

    குறிப்பாக திருப்பூா் மாவட்டத்தில் 32 நீா்வளத் துறை ஏரிகள், 22 ஒன்றிய ஏரிகள், 385 குட்டைகள் என மொத்தமாக 429 நீா்நிலைகளில் நீா்நிரப்பப்படுகிறது. இதன்மூலம் 8151 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இத்திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சாா்பாக வும், திருப்பூா் மாவட்ட மக்களின் சாா்பாகவும் நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன் என்றாா்.

    அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட மருத்துவ அலுவலா் முரளி சங்கா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    Next Story
    ×